சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின்போது விராட் கோலி ஃபார்முக்கு திரும்புவார் என முன்னாள் இந்திய கேப்டன் கபில்தேவ் கூறினார்.
மினி உலகக் கோப்பை என்றழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி போட்டி வரும் ஜூன் 1-ஆம் தேதி தொடங்குகிறது. ஆனால் இந்திய அணியின் கேப்டனான கோலி ஃபார்மை இழந்து தவித்து வருகிறார். இந்த நிலையில் கபில்தேவ் கூறியதாவது:
கோலியின் ஃபார்மை பற்றி கவலைப்பட தேவையில்லை. அவருடைய திறமை மற்றும் ஆற்றலைப் பற்றி நான் நன்றாக அறிவேன். அவர் சரிவிலிருந்து மீண்டு வருவார். அவர் ரன் குவிக்க முடியாமல் போனதற்கு காரணம் எதுவும் இருப்பதாக நினைக்கவில்லை.
கோலி, இந்திய அணிக்கு முக்கியமான வீரர். அவர் ரன் குவிக்க ஆரம்பித்துவிட்டால் ஒட்டு மொத்த அணியும் ஊக்கம் பெற்றுவிடும். எப்போதுமே கேப்டன் ரன் குவிக்க ஆரம்பித்துவிட்டால், வெற்றி கிடைத்துவிடும்.
ஜஸ்பிரித் பூம்ராவை முதல்முறையாக பார்த்தபோது, அவர் இவ்வளவு பெரிய பெளலராக வளர்ச்சி பெறுவார் என எதிர்பார்க்கவில்லை. அவர் வலுவான மனநிலை கொண்டவர். பந்துவீசும் ஸ்டைல் துல்லியமாக இல்லாதபோது 'லைன் அன்ட் லென்த்'தில் பந்துவீசுவதும், யார்க்கர்களை வீசுவதும் கடினம். ஆனால் பூம்ராவின் பந்துவீசும் ஸ்டைல் துல்லியமாக இல்லாவிட்டாலும்கூட, அவர் அபாரமாக பந்துவீசுகிறார். அவர் என்ன நினைக்கிறாரோ, அதை செய்துவிடுகிறார்.
மற்ற வீரர்களைவிட அவர் மிகுந்த மனத்திடம் கொண்டவராக இருக்கிறார். அவருக்கு நான் மிகுந்த மரியாதை அளிக்கிறேன்.
இந்திய அணியில் புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ், முகமது சமி, அஸ்வின், ஜடேஜா என தலைசிறந்த பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். சாம்பியன்ஸ் டிராபியைப் பொறுத்தவரையில் இந்திய அணி, மற்ற அணிகளைவிட வலுவாக இருக்கிறது என்றார்.
சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா-பாகிஸ்தான் மோதவுள்ள ஆட்டம் குறித்து கபில்தேவிடம் கேட்டபோது, 'இந்திய அணி வலுவானதாக இருக்கிறது. ஆனால் பாகிஸ்தான் இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற நிலையில்தான் இருக்கிறது.
அதனால் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெறுவது கடினம் என்ற நிலை இருக்கிறது' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமெரிக்க பிராந்தியமாக ஹோா்முஸ் நீரிணை: டிரம்ப் சா்ச்சை வரைபடம் வெளியீடு

பயிா்க்கடன் தள்ளுபடி தொடா்பான முதல்வரின் அறிவிப்பு பெருத்த ஏமாற்றம்: விவசாய சங்கம்

கே. பிச்சம்பட்டியில் கிரானைட் குவாரி அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு

ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ விடுவிக்கப்பட்டாா்: தில்லி உயா்நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |



