பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

புதிய வருமானப் பகிர்வு முறை: பிசிசிஐக்கு ரூ.1,879 கோடி

புதிய வருமானப் பகிர்வு முறையின்படி, பிசிசிஐக்கு அடுத்த 8 ஆண்டுகளுக்கு ரூ.1,879 கோடியை ஐசிசி ஒதுக்கீடு செய்ய உள்ளது.

Updated On :29 ஜனவரி 2024, 7:53 pm IST

புதிய வருமானப் பகிர்வு முறையின்படி, பிசிசிஐக்கு அடுத்த 8 ஆண்டுகளுக்கு ரூ.1,879 கோடியை ஐசிசி ஒதுக்கீடு செய்ய உள்ளது.
முந்தைய வருமானப் பகிர்வின் படி பிசிசிஐக்கு கிடைத்த தொகையுடன் (ரூ.3,657 கோடி) ஒப்பிடுகையில், தற்போதைய தொகையானது அதில் ஏறக்குறைய பாதியாகும். எனினும், இதர நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கான ஒதுக்கீட்டுடன் ஒப்பிடுகையில் பிசிசிஐயின் பங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நடப்பு வருமானம் மற்றும் செலவுகள் கணக்கீட்டின்படி, பிசிசிஐக்கான வருமானப் பகிர்வாக அடுத்த 8 ஆண்டுகளுக்கு ரூ.1,879 கோடி வழங்கப்படும். அதேபோல், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.917 கோடியும், ஜிம்பாப்வே கிரிக்கெட்டுக்கு ரூ.603 கோடியும் வழங்கப்பட உள்ளது. முழு உறுப்பினர்களாக இருக்கும் எஞ்சிய 7 நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களுக்கு ரூ.846 கோடி வழங்கப்படும்.
துணை உறுப்பினர்களாக இருக்கும் நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களுக்கு ரூ.1,796 கோடி வழங்கப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், ஐசிசியில் புதிதாக முன்மொழியப்பட்டு, உறுப்பு நாடுகளின் ஒப்புதலையும் பெற்ற நிர்வாக அமைப்பின் மாற்றம் குறித்தும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, முழு உறுப்பினர்கள், துணை உறுப்பினர்கள் என்ற இரு பிரிவுகள் மட்டுமே நடப்பில் இருக்கும். இணைப்பு அளவிலான உறுப்பினர்கள் முறை அகற்றப்பட்டுள்ளது.
அத்துடன் ஐசிசிக்கென சுதந்திரமான பெண் இயக்குநர் மற்றும் துணை சேர்மன் பதவிகளும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மேலும், புதிய நிர்வாக அமைப்பின் படி, அனைத்துவிதமான உறுப்பினர்களுக்கும் ஒரே மாதிரியான மதிப்புடைய வாக்குரிமை அளிக்கப்படுகிறது.
இதனிடையே, பிசிசிஐக்கான வருமானப் பகிர்வை மேலும் அதிகரித்து ரூ.2,502 கோடியாக வழங்க ஐசிசி தயாராக இருப்பதாகவும், எனினும் அந்தத் தொகையை ரூ.2,887 கோடியாக அதிகரித்துப் பெற பிசிசிஐ முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.