கொழும்பில் நேற்று தொடங்கிய இலங்கைக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 90 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் எடுத்தது. சேதேஷ்வர் புஜாரா 225 பந்துகளில் 1 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 128, அஜிங்க்ய ரஹானே 168 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 103 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார்கள். இந்த ஜோடி 4-ஆவது விக்கெட்டுக்கு ஆட்டமிழக்காமல் 211 ரன்கள் குவித்தது.
இந்நிலையில் இன்று ஆட்டம் தொடங்கியவுடன் 133 ரன்களில் கருணாரத்னே பந்துவீச்சில் வெளியேறினார் புஜாரா. 4-வது விக்கெட்டுக்கு புஜாரா - ரஹானே ஜோடி 217 ரன்கள் குவித்தது. இதன்பிறகு அஸ்வின் களமிறங்கி வழக்கம்போல தன்னுடைய பேட்டிங் திறமையை வெளிப்படுத்தினார்.
இந்திய அணி 106 ஓவர்களில் 400 ரன்களை எட்டியது. ரஹானே 126, அஸ்வின் 28 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.