கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடி, கடுகுமன்னா பகுதியைச் சேர்ந்தவர் ஏ.மது (27). பழங்குடியினத்தைச் சேர்ந்த மதுவை, அரிசி திருடியதாக குற்றம்சாட்டி கடந்த பிப்ரவரி மாதம் 22-ஆம் தேதி உள்ளூர் பொதுமக்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இச்சம்பவத்துக்கு இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் அவரது குடும்பத்துக்கும் நிதியுதவி அளித்துள்ளார். வீரேந்திர சேவாக் அறக்கட்டளை மூலமாக மதுவின் தாயாருக்கு ரூ. 1.5 லட்சத்துக்கான காசோலையை வழங்கியுள்ளார்.
இதை சமூக ஆர்வலர் ராகுல் ஈஸ்வர் உறுதிபடுத்தியுள்ளார். மேலும் இந்த காசோலையை வருகிற ஏப்ரல் 11-ஆம் தேதி மதுவின் தாயாரை நேரில் சந்தித்து வழங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.