மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

சர்வதேச சதுரங்கப் போட்டியில் 7-ஆம் வகுப்பு மாணவர் முதலிடம்

கிரீஸ் நாட்டில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ஃபோர்த் ஃபிஷ்ஷர் சதுரங்கப் போட்டியில் முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் 7-ஆம் வகுப்பு பயிலும் மாணவர் பிரக்ஞானந்தா முதலிடம் பெற்றுள்ளார்.

News image

முதலிடம் பெற்ற முகப்பேர் வேலம்மாள் பள்ளி மாணவர் பிரக்ஞானந்தா.

Updated On :19 ஏப்ரல் 2018, 1:08 am IST

கிரீஸ் நாட்டில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ஃபோர்த் ஃபிஷ்ஷர் சதுரங்கப் போட்டியில் முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் 7-ஆம் வகுப்பு பயிலும் மாணவர் பிரக்ஞானந்தா முதலிடம் பெற்றுள்ளார்.
இப்போட்டிகள் கிரீஸ் நாட்டில் கடந்த 9-ஆம் தேதி தொடங்கி 17-ஆம் தேதி வரை நடைபெற்றன. மாணவர் பிரக்ஞானந்தா 9 சுற்றுகளில் 7 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். கிராண்ட் மாஸ்டர் தகுதி பெறுவதற்கான இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 3 நிலைகளில் 2 நிலைகளை வெற்றிகரமாக நிறைவு செய்து முதல் பரிசுக்குரியவராக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சாதனை படைத்த மாணவர் பிரக்ஞானந்தாவை பள்ளி குழுமத்தின் தாளாளர் எம்.வி.எம்.வேல்மோகன் பாராட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.