

அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏஐஎப்எப்) முன்னாள் செயலாளர் பி.பி.லட்சுமணன் (83) திங்கள்கிழமை காலமானார்.
கேரள மாநில கால்பந்து சங்கத் தலைவராக பதவி வகித்த லட்சுமணன், அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு செயலாளராகவும் இருந்தார். மேலும் சர்வதேச கால்பந்து சம்மேளனம் பிஃபிபா முறையீட்டு குழு உறுப்பினராகவும் பதவி வகித்தார்.
அவருக்கு மனைவி, 4 மகள்கள், 1 மகன் உள்ளனர். அவரது மறைவுக்கு கேரள முதல்வர் பினரயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.