இனப்பாகுபாடு கடைபிடிக்கப்படுவதாகக் கூறி ஜெர்மனி தேசிய கால்பந்து அணியில் இருந்து விலகினார் முன்னணி வீரரான மெஸþட் ஒஸில்.
ஜெர்மனியில் மொத்தம் 30 லட்சத்துக்கு மேற்பட்ட துருக்கி வம்சாவளியினர் வசித்து வருகின்றனர். அந்த இனத்தைச் சேர்ந்த வீரரான மெஸுட் தேசிய கால்பந்து அணியில் விளையாடி வருகிறார். இந்நிலையில் உலகக் கோப்பை போட்டிக்கு முன்னர் மே மாதம் அவர் துருக்கி அதிபர் எர்டோகனை சந்தித்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
இதனால் பல்வேறு தரப்பினர் அவரைக் கண்டித்தனர். ஜெர்மனி அணிக்கு விசுவாசமாக இருப்பாரா என கேள்வி எழுப்பினர். இதனால் உலகக் கோப்பை அணியில் இருந்து அவர் விளையாட அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் அணியில் இனப்பாகுபாடு கடைபிடிக்கப்படுகிறது. ஜெர்மன் கால்பந்து கூட்டமைப்பு துருக்கி வம்சாவளி வீரர்களை அவமதித்து, பாகுபாடு காண்பிக்கிறது எனக் கூறி தேசிய அணியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்.
எனக்கு இரு இதயங்கள் உள்ளன. ஒன்று ஜெர்மனி, மற்றொன்று துருக்கி, பழைய பரம்பரை வேர்களை மறக்கக் கூடாது என எனது தாயார் கூறியுள்ளார். அதைத் தான் நான் கடைபிடித்து வருகிறேன் என்றார்.
இதுகுறித்து ஜெர்மனி நீதித்துறை அமைச்சர் கேட்டரினா கூறுகையில், நாட்டின் நட்சத்திர வீரரான மெஸுட் பாகுபாடு பின்பற்றுவதாகக் கூறி தேசிய அணியில் இருந்து விலகுவது அபாயகரமான அறிகுறி என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசுக் கலைக் கல்லூரிகளில் அதிக விண்ணப்பம் வந்திருக்கும் படிப்பு இதுதான்!

தமிழ்நாட்டில் இன்று 4, நாளை 3 மாவட்டங்களில் கனமழை!

போதைப் பொருள் கடத்தலுக்கும் எனக்கும் தொடர்பில்லை! ஜான் பிரிட்டோ

பிலிப்பின்ஸ் நிலநடுக்கம்: 37 பேர் பலி; 20,000-க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்வு!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



