திமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி திருப்பூர் மேயர் ராஜிநாமா சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்
/

முன்னாள் வீரர் ஜெயசூர்யா மீது ஐசிசி ஊழல் தடுப்புப் பிரிவு புகார்!

இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூர்யா, ஐசிசி விதிமுறைகளை மீறியுள்ளதாக...

News image
Updated On :15 அக்டோபர் 2018, 11:03 am

இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூர்யா, ஐசிசி விதிமுறைகளை மீறியுள்ளதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து ஊழல் தடுப்பு விதிமுறைகளை மீறிய குற்றத்துக்காக ஜெயசூர்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது ஐசிசி. குற்றச்சாட்டுகளுக்கு 14 நாள்களில் பதில் அளிக்கும்படி கட்டளையிடப்பட்டுள்ளது. 

இலங்கை கிரிக்கெட்டில் உள்ள ஊழல்கள் குறித்து ஐசிசி ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணை செய்து வருகிறது. ஐசிசி ஊழல் தடுப்புப் பிரிவுக்கு ஒத்துழைப்பு அளிக்காதது, சரியான தகவல்கள் அளிக்காதது மற்றும் ஐசிசி விசாரணையைத் தாமதப்படுத்தும் நோக்கில் ஆதாரங்களை அழிக்க முற்படுவது போன்ற குற்றச்சாட்டுகள் ஜெயசூர்யா மீது சுமத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து விரைவில் பதில் அளிக்க அவருக்கு ஐசிசி கட்டளையிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.