உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

'அப்டேட்டில் இருக்கும் ஒரே சாஃப்ட்வேர்'- விராட்டுக்கு வீரு புகழாரம்!

அப்டேட்டில் இருக்கும் ஒரே சாஃப்ட்வேர் விராட் கோலி தான் என அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் புகழாரம் சூட்டியுள்ளார். 

News image
Updated On :30 ஜனவரி 2024, 10:38 pm IST

அப்டேட்டில் இருக்கும் ஒரே சாஃப்ட்வேர் விராட் கோலி தான் என அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் புகழாரம் சூட்டியுள்ளார். 

இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரரும், உலகின் தலைசிறந்த அதிரடி வீரருமான வீரேந்திர சேவாக், ட்விட்டரில் அதிரடி கருத்துக்களை பதிவிடுவதிலும் கில்லாடி. அவ்வகையில் அந்தந்த நிகழ்வுகளை அடுத்து அவரது ட்வீட்கள் இடம்பெறும். 

இந்நிலையில், இந்திய கேப்டன் விராட் கோலி குறித்து தற்போது சேவாக் செய்த ட்வீட் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதில், அப்டேட்டில் இருக்கும் ஒரே சாஃப்ட்வேர், ஸ்திரத்தன்மையின் மறுபெயர் விராட் கோலி. 9 ஆயிரம் ரன்களைக் கடந்த 11 இன்னிங்ஸ்களுக்குள்ளாக 10 ஆயிரம் ரன்களையும் தற்போது கடந்துள்ளார். அதுபோதாது என 37-ஆவது சதத்தையும் பதிவு செய்துள்ளார். கிங் கோலியின் ஆட்டத்தை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, மே.இ.தீவுகளுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 37-ஆவது சதத்தை பதிவு செய்தது மட்டுமல்லாமல், 10 ஆயிரம் ரன்களை வேகமாகக் கடந்த வீரர் எனும் புதிய சாதனையைப் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.