குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

'அப்டேட்டில் இருக்கும் ஒரே சாஃப்ட்வேர்'- விராட்டுக்கு வீரு புகழாரம்!

அப்டேட்டில் இருக்கும் ஒரே சாஃப்ட்வேர் விராட் கோலி தான் என அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் புகழாரம் சூட்டியுள்ளார். 

News image
Updated On :24 அக்டோபர் 2018, 6:00 pm IST

அப்டேட்டில் இருக்கும் ஒரே சாஃப்ட்வேர் விராட் கோலி தான் என அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் புகழாரம் சூட்டியுள்ளார். 

இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரரும், உலகின் தலைசிறந்த அதிரடி வீரருமான வீரேந்திர சேவாக், ட்விட்டரில் அதிரடி கருத்துக்களை பதிவிடுவதிலும் கில்லாடி. அவ்வகையில் அந்தந்த நிகழ்வுகளை அடுத்து அவரது ட்வீட்கள் இடம்பெறும். 

இந்நிலையில், இந்திய கேப்டன் விராட் கோலி குறித்து தற்போது சேவாக் செய்த ட்வீட் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதில், அப்டேட்டில் இருக்கும் ஒரே சாஃப்ட்வேர், ஸ்திரத்தன்மையின் மறுபெயர் விராட் கோலி. 9 ஆயிரம் ரன்களைக் கடந்த 11 இன்னிங்ஸ்களுக்குள்ளாக 10 ஆயிரம் ரன்களையும் தற்போது கடந்துள்ளார். அதுபோதாது என 37-ஆவது சதத்தையும் பதிவு செய்துள்ளார். கிங் கோலியின் ஆட்டத்தை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, மே.இ.தீவுகளுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 37-ஆவது சதத்தை பதிவு செய்தது மட்டுமல்லாமல், 10 ஆயிரம் ரன்களை வேகமாகக் கடந்த வீரர் எனும் புதிய சாதனையைப் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.