

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் விக்கெட் கீப்பா் மாா்க் பௌச்சா் சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளாா். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று, டி20 போட்டிகளில் விளையாடி வரும் பிரபல வீரர் டி வில்லியர்ஸை மீண்டும் தென் ஆப்பிரிக்க அணியில் இடம்பெற வைத்து, டி20 உலகக் கோப்பையில் விளையாட வைக்கவுள்ளதாக அவர் கூறினார்.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டு பிளெஸ்ஸிஸும் பெளச்சரின் கருத்தை ஏற்றுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
டி வில்லியர்ஸ் மீண்டும் தென் ஆப்பிரிக்க அணிக்குத் திரும்ப வேண்டும் என மக்கள் எண்ணுகிறார்கள். நானும் அவ்வாறே எண்ணுகிறேன். இதுகுறித்து அவருடன் கடந்த 2, 3 மாதங்களாகப் பேசி வருகிறோம் என்று பேட்டியளித்துள்ளார்.
கடந்த வருடம் மே 23 அன்று, சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக டி வில்லியர்ஸ் அறிவித்தார். 34 வயது டி வில்லியர்ஸ் தன்னுடைய திடீர் ஓய்வு அறிவிப்பை சமூகவலைத்தளம் வழியாக அறிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.