அதிரடியாக விளையாடும் தொடக்க வீரர்கள்: விக்கெட் இழப்பின்றி 150 ரன்கள் எடுத்துள்ள இந்திய அணி!

26-வது ஓவரில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 150 ரன்கள் எடுத்தது... 
அதிரடியாக விளையாடும் தொடக்க வீரர்கள்: விக்கெட் இழப்பின்றி 150 ரன்கள் எடுத்துள்ள இந்திய அணி!
Updated on
1 min read

டி20, ஒருநாள் தொடா்களில் பங்கேற்பதற்காக மே.இ.தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் 2-1 என கைப்பற்றியது இந்தியா. இதன் தொடா்ச்சியாக 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடா் நடைபெற்று வருகிறது. சென்னையில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி அபார வெற்றி பெற்றது. 2-வது ஒருநாள் ஆட்டம் விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்று வருகிறது. 

டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. அந்த அணியில் லூயிஸ், கேரி பியரி ஆகிய இருவரும் இடம்பிடித்துள்ளார்கள். இந்திய அணியில் ஷிவம் டுபேவுக்குப் பதிலாக ஷர்துல் தாக்குர் சேர்க்கப்பட்டுள்ளார்.

முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி தோற்றதால் இந்த ஆட்டத்தில் ஜெயிக்க வேண்டும் என்கிற முனைப்புடன் இந்தியத் தொடக்க வீரர்கள் விளையாடினார்கள். முதல் 10 ஓவர்களில் இரு சிக்ஸர்கள் அடித்தார் ராகுல். இதனால் இந்திய அணி 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 55 ரன்கள் எடுத்தது. பந்துகளை வீணடிக்காமல் ஆடிய ராகுல், 46 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். மறுமுனையில் கவனமாக விளையாடி ரன்கள் சேர்த்தார் ரோஹித் சர்மா. நடுவில் 12 பந்துகளுக்கு ஒரு ரன்னும் எடுக்காமல் விளையாடினார். 67 பந்துகளில் அரை சதத்தை எட்டினார் ரோஹித். 26-வது ஓவரில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 150 ரன்கள் எடுத்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com