ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

ஐபிஎல் ஏலத்தில் புதிதாக இணைந்துள்ள 6 வீரர்கள்!

ஐபிஎல் அணிகளின் கோரிக்கைக்கு ஏற்ப 4 இந்திய வீரர்களும் 2 வெளிநாட்டு வீரர்களும் ஏலத்தில் இணைந்துள்ளார்கள்.

News image
Updated On :19 டிசம்பர் 2019, 6:02 am

ஐபிஎல் 2020 சீசனுக்கான வீரா்கள் ஏலம் கொல்கத்தாவில் இன்று நடைபெறுகிறது. ஏலத்துக்கு முன்னதாக 71 வீரா்களை அணிகள் விடுவித்துள்ளன. 35 வெளிநாட்டு வீரா்கள் உள்பட 127 பேரை தக்க வைத்துக்கொண்டன. ஐபிஎல் ஏலத்தில் 332 வீரர்கள் கலந்துகொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் இதற்கு முன்பு அறிவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலில் புதிதாக 6 வீரர்கள் இணைந்துள்ளார்கள். இதன்மூலம் ஏலத்தில் பங்குபெறும் வீரர்களின் எண்ணிக்கை 338 ஆக உயர்ந்துள்ளது.

ஐபிஎல் அணிகளின் கோரிக்கைக்கு ஏற்ப 4 இந்திய வீரர்களும் 2 வெளிநாட்டு வீரர்களும் ஏலத்தில் இணைந்துள்ளார்கள். வினய் குமார், அசோக் டிண்டா, ராபின் பிஸ்ட், சஞ்சய் யாதவ், மேத்யூ வேட், ஜேக் வெதரால்ட் என ஆறு வீரர்களும் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.