ஐபிஎல் ஏலத்தில் பிரபல பேட்ஸ்மேன்களைத் தேர்வு செய்த அணிகள்: புஜாரா, விஹாரிக்கு ஏமாற்றம்

டெஸ்ட் வீரர்களான ஹனுமா விஹாரி, புஜாரா ஆகிய இருவரையும் எந்த அணியும் தேர்வு செய்யவில்லை. 
ஐபிஎல் ஏலத்தில் பிரபல பேட்ஸ்மேன்களைத் தேர்வு செய்த அணிகள்: புஜாரா, விஹாரிக்கு ஏமாற்றம்
Updated on
1 min read

ஐபிஎல் 2020 சீசனுக்கான வீரா்கள் ஏலம் கொல்கத்தாவில் இன்று நடைபெற்று வருகிறது. ஏலத்துக்கு முன்னதாக 71 வீரா்களை அணிகள் விடுவித்துள்ளன. 35 வெளிநாட்டு வீரா்கள் உள்பட 127 பேரை தக்க வைத்துக்கொண்டன. ஐபிஎல் ஏலத்தில் 338 வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள். 

ஏலத்தில் முதல் வீரராக ஆஸ்திரேலியாவின் கிறிஸ் லின் இடம்பெற்றார். அவருடைய அடிப்படை விலை - ரூ. 2 கோடி. அதே தொகைக்கு மும்பை அணி அவரை தேர்வு செய்தது.

இங்கிலாந்து அணிக்கு உலகக் கோப்பையைப் பெற்றுத் தந்த இயன் மார்க்னைத் தேர்வு செய்ய கொல்கத்தாவும் தில்லியும் போட்டியிட்டன. கடைசியில் ரூ. 5.25 கோடிக்கு மார்கனைத் தேர்வு செய்தது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி. 

ராபின் உத்தப்பாவை ரூ. 3 கோடிக்குத் தேர்வு செய்தது ராஜஸ்தான் அணி. டெஸ்ட் வீரர்களான ஹனுமா விஹாரி, புஜாரா ஆகிய இருவரையும் எந்த அணியும் தேர்வு செய்யவில்லை. 

இங்கிலாந்து தொடக்க வீரர் கிறிஸ் லின்னை ரூ. 1.50 கோடிக்குத் தேர்வு செய்தது தில்லி அணி. 

ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபிஞ்சைத் தேர்வு செய்ய ஆர்சிபி, கேகேஆர் அணிகள் போட்டியிட்டன. கடைசியில் ஆர்சிபி அணி ரூ. 4.40 கோடிக்குத் தேர்வு செய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com