இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

விஜய் சங்கரை மெச்சிய தேர்வுக்குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத்!

பந்துவீச்சில் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் பங்களிப்பதால் அவரால் இரட்டைப் பலன்கள் கிடைக்கின்றன.

News image
Updated On :16 பிப்ரவரி 2019, 7:32 am

எழில்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20, ஒரு நாள் தொடர்களில் பங்கேற்க உள்ள இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அணியிலிருந்து தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டுள்ளார். கே.எல்.ராகுல் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். புதுமுகமாக சுழற்பந்து வீச்சாளர் மயங்க் மார்கண்டே இடம் பெற்றுள்ளார். ஐசிசி ஒரு நாள் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் இந்தியாவில் 2 டி20, 5 ஒரு நாள் ஆட்டங்கள் கொண்ட தொடரில் ஆஸி. அணி ஆடுகிறது. 

இந்நிலையில் அணித் தேர்வு குறித்து பேசிய எம்எஸ்கே பிரசாத், தமிழக வீரர் விஜய் சங்கரை மிகவும் பாராட்டிப் பேசினார். அவர் கூறியதாவது:

சமீபத்தில் தொடர்களில் விஜய் சங்கர் விளையாடிய விதம் அணியின் வடிவத்தை மாற்றியுள்ளது. பந்துவீச்சில் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் பங்களிப்பதால் அவரால் இரட்டைப் பலன்கள் கிடைக்கின்றன. அவருடைய ஆட்டத்திறனை அடுத்தச் சில ஆட்டங்களிலும் மதிப்பீடு செய்வோம் என்று கூறியுள்ளார்.      

விராட் கோலி அணியில் விளையாடாத நிலையில் மூன்றாம்  நிலை வீரராகக் களமிறங்கி சிறப்பாக விளையாடியதால் உலகக் கோப்பைக்கான அணியில் விஜய் சங்கர் நிச்சயம் இடம்பெறுவார் என்று அறியப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.