மெரில்போன் கிரிக்கெட் கிளப் (எம்சிசி) அமைப்பின் முதல் வெளிநாட்டுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் இலங்கையின் முன்னாள் வீரர் குமார் சங்கக்காரா.
அக்டோபர் 1 முதல் இந்தப் பதவியில் ஒரு வருடக் காலத்துக்கு அவர் அமர்த்தப்படுவார். இதன்மூலம், பாரம்பரியமிக்க எம்சிசி அமைப்பின் இங்கிலாந்து குடிமகனாக அல்லாத முதல் தலைவர் என்கிற பெருமையை அடைந்துள்ளார் சங்கக்காரா.
எம்சிசி அமைப்பு 1787-ல் தொடங்கப்பட்டது. கிரிக்கெட் போட்டிகளை நிர்வகித்து வரும் ஐசிசி அமைப்புக்கு கிரிக்கெட் ஆட்டங்களுக்கான விதிமுறைகளைப் பரிந்துரை செய்யும் பணியை எம்சிசி வேர்ல்ட் கிரிக்கெட் கமிட்டி தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.