ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

மைதானத்துக்குள் அத்துமீறி நுழைந்த கோலி ரசிகர்!

இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் ஆட்டத்தின்போது, விராட் கோலியின் ரசிகர் ஒருவர் மைதானத்துக்குள் அத்துமீறி நுழைந்து வீரர்களின் காலில் விழ முயற்சித்தார்.

News image
Updated On :16 நவம்பர் 2019, 1:26 pm

DIN


இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் ஆட்டத்தின்போது, விராட் கோலியின் ரசிகர் ஒருவர் மைதானத்துக்குள் அத்துமீறி நுழைந்து வீரர்களின் காலில் விழ முயற்சித்தார்.

இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெற்றது. மூன்றே நாள்களில் நிறைவடைந்த இந்த ஆட்டத்தில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதனிடையே, இன்றைய ஆட்டத்தின்போது, விராட் கோலியின் ரசிகர் ஒருவர் அத்துமீறி மைதானத்துக்குள் நுழைந்தார். உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சூரஜ் பிஷ்ட் (22) பாதுகாப்பு வளையங்களையும் மீறி களத்துக்குச் சென்று இந்திய வீரர்களின் காலில் விழ முயற்சித்தார். இதன்பிறகு பாதுகாப்பு அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தினர்.

Story image

அவர் விராட் கோலியின் பெயர் கொண்ட மேலாடையை அணிந்திருந்தார். அவருடைய முகத்தில் விராட் கோலியின் ஆங்கில பெயர் சுருக்கமான 'விகே' (VK) என எழுதப்பட்டிருந்தது. அதேசமயம் அவருடைய கையில் விராட் கோலி என பச்சை குத்தப்பட்டுள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.