தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

தொடக்க வீரராக ரோஹித் சர்மாவுக்கு அருமையான தொடக்கம்: மதிய உணவு இடைவேளை - இந்தியா 91/0

இதனால் தான் அவர் இந்த டெஸ்டில் எப்படியாவது விளையாட வேண்டும் என்று கோலியும் சாஸ்திரியும் முடிவெடுத்து...

News image
Updated On :2 அக்டோபர் 2019, 6:16 am

எழில்

தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்குச் சுற்றுபயணம் செய்து டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஏற்கெனவே டி20 தொடா் 1-1 என சமநிலையில் முடிந்தது. இதையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடா் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் ஆட்டம் விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது. 

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தென் ஆப்பிரிக்க அணியில் முத்துசாமி டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகம்  ஆகியுள்ளார். 

தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும் மயங்க் அகர்வாலும் களமிறங்கினார்கள். இருவரும் மிகவும் கவனமாக விளையாடி முதல் 15 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் எடுத்தார்கள். 19 ஓவர்கள் வரை பொறுமையாக விளையாடிய ரோஹித், மஹராஜ் வீசிய 20-வது ஓவரின் முதல் பந்தில் ஏறி வந்து சிக்ஸர் அடித்தார். அடுத்தச் சில ஓவர்கள் கழித்து பீடிட் பந்தில் சிக்ஸர் அடித்தார் மயங்க். அதே பந்துவீச்சாளர் பந்தில் தானும் ஒரு சிக்ஸர் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார் ரோஹித் சர்மா. இதனால் 25-வது ஓவரின் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 79 ரன்கள் எடுத்தது. ரபடா, பிலாண்டர் பந்துவீச்சைப் பக்குவமாக எதிர்கொண்ட ரோஹித் சர்மா, சுழற்பந்துவீச்சில் அதிக ரன்கள் எடுத்தார். 

84 பந்துகளில் தொடக்க வீரராக தனது முதல் அரை சதத்தை எடுத்தார் ரோஹித் சர்மா. இது இந்தியாவில் விளையாடிய டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா எடுத்துள்ள தொடர்ச்சியான ஆறாவது அரை சதம். இதனால் தான் அவர் இந்த டெஸ்டில் எப்படியாவது விளையாட வேண்டும் என்று கோலியும் சாஸ்திரியும் முடிவெடுத்து அவரைத் தொடக்க வீரராகக் களமிறக்கியுள்ளார்கள். அவர்களின் முடிவு மிகச்சரியானது என்பதைத் தனது ஆட்டத்தின் மூலம் நிரூபித்தார் ரோஹித் சர்மா. 

முதல் நாள் மதிய உணவு இடைவேளையின்போது இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 30 ஓவர்களில் 91 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மா 52, மயங்க் அகர்வால் 39 ரன்களுடனும் களத்தில் உள்ளார்கள். இதனால் டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு அருமையான தொடக்கம் அமைந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.