பாகிஸ்தானில் நடைபெற்ற கிளப் அளவிலான கிரிக்கெட் போட்டியின்போது மாரடைப்பால் கள நடுவர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
கராச்சி அருகே உள்ள குல்பர்க் நகரில் நடைபெற்ற கிளப் அளவிலான கிரிக்கெட் போட்டியின்போது கள நடுவராகப் பணியாற்றிய நசிம் ஷீக்குக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நின்ற இடத்திலேயே அவர் கீழே விழுந்துள்ளார். இதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் வழியிலேயே நசிமின் உயிர் பிரிந்துள்ளது.