மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

உலக மகளிர் குத்துச்சண்டை: இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் இந்தியாவின் மஞ்சு ராணி!

உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் இந்தியாவின் மஞ்சு ராணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

News image
Updated On :12 அக்டோபர் 2019, 12:17 pm

ரஷியாவின் உலன் உடேவில் அக். 3-ம் தேதி தொடங்கிய உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் இந்தியாவின் மஞ்சு ராணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இன்று நடைபெற்ற அரையிறுதிச் சுற்றில் தாய்லாந்தின் ரக்சத்தை எதிர்கொண்டார் மஞ்சு ராணி. மிகவும் கவனமாக விளையாடிய மஞ்சு ராணி, 4-1 என்கிற புள்ளிக்கணக்கில் இந்த ஆட்டத்தை வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். ஹரியாணாவைச் சேர்ந்த மஞ்சு ராணி, முதல்முறையாக உலக மகளிர் குத்துச்சண்டைப் போட்டியில் கலந்துகொள்கிறார். இறுதிச்சுற்றில் ரஷியாவின் எகாடெரினாவை அவர் சந்திக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.