தியோதர் கோப்பை 50 ஓவர் போட்டி: இந்தியா ஏ அணியில் அஸ்வின்!

2017 ஜூன் மாதத்துக்குப் பிறகு இந்திய ஒருநாள் அணியில் அஸ்வினுக்கு இடம் கிடைப்பதில்லை.
தியோதர் கோப்பை 50 ஓவர் போட்டி: இந்தியா ஏ அணியில் அஸ்வின்!
Updated on
1 min read

ராஞ்சியில் அக்டோபர் 31 முதல் நவம்பர் 4 வரை நடைபெறவுள்ள தியோதர் கோப்பை 50 ஓவர் போட்டிக்கான மூன்று அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்திய ஏ அணிக்கு விஹாரியும் இந்தியா பி அணிக்கு பார்தீவ் படேலும் இந்தியா சி அணிக்கு ஷுப்மன் கில்லும் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். 

இந்தியா ஏ அணியில் ஆர். அஸ்வின் இடம்பெற்றுள்ளார். 2017 ஜூன் மாதத்துக்குப் பிறகு இந்திய ஒருநாள் அணியில் அஸ்வினுக்கு இடம் கிடைப்பதில்லை. இந்நிலையில் இந்தப் போட்டியில் சிறப்பாகப் பந்துவீசினால் அது அஸ்வினுக்குத் திருப்புமுனையாக அமையலாம்.

மேலும் தமிழக வீரர்களான விஜய் சங்கர், பாபா அபரஜித் ஆகியோர் இந்தியா பி அணியில் இடம்பெற்றுள்ளார்கள். இந்தியா சி அணியின் விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் தேர்வாகியுள்ளார். எனினும் விஜய் ஹசாரே போட்டியில் சிறப்பாக விளையாடிய அபினவ் முகுந்துக்கு எந்த அணியிலும் இடம் கிடைக்கவில்லை. 

சமீபத்தில் விஜய் ஹசாரே போட்டியில் இரட்டைச் சதமெடுத்த இளம் மும்பை வீரர் யாஷவி ஜைஸ்வாலுக்கு இந்தியா பி அணியில் இடம் கிடைத்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com