இரட்டை ஆதாயப் பதவி விவகாரம் தொடர்பாக வரும் நவம்பர் 12 அன்று நேரில் ஆஜராகுமாறு முன்னாள் வீரரும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குநருமான ராகுல் டிராவிட்டுக்கு பிசிசிஐ நெறிமுறைகள் அலுவலர் டி.கே.ஜெயின் நோட்டீஸ் அனுப்பினார்.
ஐபிஎல் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளர் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் ராகுல் டிராவிட் துணை தலைவராக உள்ளார். இந்நிலையில் அவரை பெங்களுருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக பிசிசிஐ நியமித்தது. இது இரட்டை ஆதாயப் பதவி வகிப்பதாகும் என மத்திய பிரதேச கிரிக்கெட் சங்க ஆயுள் உறுப்பினர் சஞ்சீவ் குப்தா புகார் செய்தார். புதிய பிசிசிஐ சட்டவரையறையின்படி ஒருவர் ஒரு பதவி தான் வகிக்க வேண்டும், இல்லையென்றால் அது ஆதாயம் தரும் இரட்டைப் பதவி வரம்பில் வரும் எனக் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, இதுதொடர்பாக எழுத்துபூர்வமாகப் பதில் தருமாறு டிராவிட்டுக்கு பிசிசிஐ நெறிமுறைகள் அலுவலர் டி.கே. ஜெயின் அறிவுறுத்தியிருந்தார். இரட்டை ஆதாயப் பதவி விவகாரம் தொடர்பாக செப். 26-ல் நேரில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பினார்.
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் இருந்து தான் நீண்ட நாள் விடுப்பில் உள்ளேன். மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என டிராவிட் தனது பதிலில் கூறியிருந்தார். இந்நிலையில் இரட்டை ஆதாயப் பதவி விவகாரம் தொடர்பாக வரும் நவம்பர் 12 அன்று நேரில் ஆஜராகுமாறு டிராவிட்டுக்கு டி.கே.ஜெயின் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கடக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள் (27 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! துலா ராசிக்கு மன அமைதி!
பொறுப்பால் உயரும் பெருமை!
கடைசிப் பந்து சிக்ஸரால் மாறிய ஆட்டத்தின் போக்கு: சூப்பர் ஓவரில் கொல்கத்தா ‘த்ரில்’ வெற்றி!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


