பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

குடும்ப வன்முறை வழக்கு: 15 நாட்களில் சரணடையுமாறு ஷமிக்கு நீதிமன்றம் உத்தரவு

குடும்ப வன்முறை வழக்கு தொடர்பாக, கிரிக்கெட் வீரர் முகமது ஷமி 15 நாட்களில் சரணடைய வேண்டும் என்று அலிப்பூர் நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :2 செப்டம்பர் 2019, 1:42 pm

DIN


குடும்ப வன்முறை வழக்கு தொடர்பாக, கிரிக்கெட் வீரர் முகமது ஷமி 15 நாட்களில் சரணடைய வேண்டும் என்று அலிப்பூர் நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது. 

முகமது ஷமியின் மனைவி ஹாஸின் ஜஹான் சமூகவலைதளம் மூலம் அவர் மீது பல்வேறு புகார்களை சுமத்தி இருந்தார். மேலும், குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் ஷமி மீது கொல்கத்தா போலீஸிடம் புகார் செய்தார். இருந்தபோதிலும், தன் மீதான புகார்களை ஷமி மறுத்து வருகிறார்.
 
இதையடுத்து, இந்திய தண்டனை சட்டம் 498ஏ, 354ஏ பிரிவுகளின் கீழ் அலிப்பூர் நீதிமன்றத்தில் ஷமி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக முகமது ஷமி மற்றும் அவரது சகோதரர் ஹாசித் அஹமது ஆகியோருக்கு எதிராக 15 நாட்களில் சரணடையுமாறு அலிப்பூர் நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.