விஜய் ஹசாரே போட்டியில் விளையாடவுள்ள ரிஷப் பந்த், ஷிகர் தவன்!

தில்லி அணியில் இடம்பெற்றுள்ள ஷிகர் தவன், ரிஷப் பந்த், வேகப்பந்துவீச்சாளர் சைனி ஆகியோர் தாங்கள் விளையாடுதை உறுதி செய்துள்ளார்கள்.
விஜய் ஹசாரே போட்டியில் விளையாடவுள்ள ரிஷப் பந்த், ஷிகர் தவன்!
Published on
Updated on
1 min read

விஜய் ஹசாரே கோப்பைப் போட்டி செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 25 வரை பெங்களூரு, ஜெய்ப்பூர், வதோதரா, டெஹ்ராடுன் ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளது.

இப்போட்டிக்கான தில்லி அணியில் இடம்பெற்றுள்ள ஷிகர் தவன், ரிஷப் பந்த், வேகப்பந்துவீச்சாளர் சைனி ஆகியோர் தாங்கள் விளையாடுதை உறுதி செய்துள்ளார்கள்.

அக்டோபர் 2 அன்று இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. இதனால், இந்திய அணியின் முதன்மையான விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த், இப்போட்டியில் எவ்வளவு ஆட்டங்களில் விளையாடுவார் என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஷிகர் தவனும் சைனியும் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிக்காததால் அவர்கள் முழுப்போட்டியிலும் பங்கேற்பார்கள்.

தவன், ரிஷப், சைனி ஆகியோர் தில்லி அணிக்காக விளையாடுவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நேரம் கிடைக்கும்போது விராட் கோலியும் இஷாந்த் சர்மாவும் இப்போட்டியில் கலந்துகொள்வார்கள் என்று கூறியுள்ளார் தில்லி கிரிக்கெட் சங்கத் தலைவர் ரஜத் சர்மா. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com