நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மீண்டும் ஜொலித்தார் ஹர்மன்பிரீத்: ஸ்பெயினை வீழ்த்தியது இந்திய ஆடவர் ஹாக்கி

ஸ்பெயினுக்கு எதிரான ஹாக்கி போட்டியில் இந்திய அணி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

News image

கோப்புப்படம்

Updated On :29 செப்டம்பர் 2019, 5:20 pm

DIN


ஸ்பெயினுக்கு எதிரான ஹாக்கி போட்டியில் இந்திய அணி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 

பெல்ஜியத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஹாக்கி அணி பெல்ஜியத்துக்கு எதிராக 3 ஆட்டங்களிலும், ஸ்பெயினுக்கு எதிராக 2 ஆட்டங்களிலும் விளையாடுகிறது. பெல்ஜியத்துக்கு எதிரான முதல் ஆட்டம் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இரண்டாவது ஆட்டத்தில் இந்திய அணி நேற்று ஸ்பெயினை எதிர்கொண்டது. இதில், இந்திய அணி 6-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், மூன்றாவது ஆட்டத்தில் இந்திய அணி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் ஸ்பெயினை எதிர்கொண்டது. இதில், இந்திய அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. போட்டி தொடங்கிய 3-வது நிமிடத்திலேயே ஸ்பெயின் முதல் கோலை அடித்து கோல் கணக்கை தொடங்கியது. இந்த கோல் மூலம் ஸ்பெயின் அணி இந்தியாவுக்கு அழுத்தம் தந்தது. 

இருந்தபோதிலும் முதல் 2 ஆட்டங்களில் வெற்றிகண்ட நம்பிக்கையுடன் இந்திய அணி நேர்மறையாக எதிர்கொண்டது. இந்தியாவின் ஆகாஷ்தீப் போட்டியின் 5-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார். 

இதன்பிறகு, நம்பிக்கையுடன் தென்பட்ட இந்திய அணி போட்டியின் 20-வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடித்து 2-1 என முன்னிலைப் பெற்றது. இந்த கோலை எஸ்வி சுனில் அடித்தார். எனினும், ஸ்பெயின் அணி விடாது முயற்சித்து கோல் அடிக்கும் வாய்ப்புகளை உருவாக்கியது. ஆனால், அவை கோலாக மாறவில்லை. இதன்மூலம், முதல் பாதி ஆட்டத்தில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகித்தது.

2-வது பாதி ஆட்டத்தை இந்திய அணி சிறப்பாக தொடங்கி கோல் அடிப்பதற்கான சூழலை உருவாக்கியது. இதற்குப் பலனாக 35-வது நிமிடத்தில் ராமன்தீப் சிங் இந்தியாவின் 3-வது கோலை அடித்தார். அடுத்த 6 நிமிடங்களில் இந்தியாவுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை ஹர்மன்பிரீத் சிங் கோலாக மாற்றி 4-1 என முன்னிலைப் பெறச் செய்தார். 

இந்திய அணி அடித்த அடுத்தடுத்த கோல்களால், ஸ்பெயின் அணி அந்த நெருக்கடியில் இருந்து மீளவில்லை. இதனால், சிறப்பாக விளையாடி வந்த இந்திய அணி 51-வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோலை அடித்தது. இந்த கோலையும் ஹர்மன்பிரீத் சிங்தான் அடித்தார். 

இதன்மூலம், ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5-1 என்ற கோல் கணக்கில் மீண்டும் அசத்தலான வெற்றியைப் பெற்றது. 

இந்திய அணி தனது அடுத்த போட்டியில் வரும் செவ்வாய்கிழமை உலகின் 2-ஆம் நிலை அணியான பெல்ஜியத்தை எதிர்கொள்கிறது.

எதிர்வரும் போட்டிகள் அட்டவணை:

பெல்ஜியம் - இந்தியா (அக்டோபர் 1)

பெல்ஜியம் -  இந்தியா (அக்டோபர் 3)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.