அதிர்ச்சியில் ரசிகர்கள்: சிஎஸ்கே அணியின் மற்றொரு வீரருக்கு கரோனா?

இந்திய வேகப்பந்து வீச்சாளருக்கு அடுத்ததாக சிஎஸ்கே அணியின் மற்றொரு வீரரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக...
அதிர்ச்சியில் ரசிகர்கள்: சிஎஸ்கே அணியின் மற்றொரு வீரருக்கு கரோனா?
Published on
Updated on
1 min read

இந்திய வேகப்பந்து வீச்சாளருக்கு அடுத்ததாக சிஎஸ்கே அணியின் மற்றொரு வீரரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கரோனா பரவல் காரணமாக நிகழாண்டு இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டி தள்ளிவைக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பா் 19-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டி, நவம்பா் 10-ம் தேதி முடிவடைகிறது. துபை, அபுதாபி, ஷாா்ஜாவில் உள்ள மைதானங்களில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

துபைக்கு ஆகஸ்ட் 21 அன்று வந்த சிஎஸ்கே அணி, தங்கள் தனிமைப்படுத்துதல் காலத்தைத் திடீரென நீட்டித்துள்ளது. நேற்று முதல் பயிற்சியை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், செப்டம்பர் 1 முதல் பயிற்சியை ஆரம்பிக்க சிஎஸ்கே அணி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. 

துபை நட்சத்திர விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சிஎஸ்கே வீரர்களில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் துபையில் உள்ள சிஎஸ்கே உறுப்பினர்கள் 12 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் மேலும் சில நாள்களுக்கு சிஎஸ்கே வீரர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று அறியப்படுகிறது.

இந்நிலையில் சிஎஸ்கே அணியில் உள்ள இளம் இந்திய பேட்ஸ்மேன் ஒருவரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். 

இதையடுத்து சிஎஸ்கேவைச் சேர்ந்தவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது பற்றிய அதிகாரபூர்வத் தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com