விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

2-ஆவது டெஸ்டில் வார்னர், அப்பாட் இல்லை

ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் டேவிட் வார்னர், பெளலர் சீன் அப்பாட் ஆகியோர் இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்டிலும் அணியில் சேர்க்கப்படவில்லை. 

News image
Updated On :23 டிசம்பர் 2020, 10:33 pm

DIN


ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் டேவிட் வார்னர், பெளலர் சீன் அப்பாட் ஆகியோர் இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்டிலும் அணியில் சேர்க்கப்படவில்லை. 
காயத்துக்காக சிகிச்சை பெற "பயோ-பபுள்' பாதுகாப்பு வளையத்தைவிட்டு அவர்கள் வெளியேறியிருந்ததால், தற்போதைய சூழ்நிலையில் மீண்டும் அவர்களை அணியில் சேர்க்க வாய்ப்பில்லை என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. 
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது வார்னருக்கு இடுப்பில் காயம் ஏற்பட்டது. இந்திய "ஏ' அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின்போது சீன் அப்பாட்டுக்கு கால் தசையில் காயமானது. இதனால் இருவருமே இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் விளையாடவில்லை. 
காயத்துக்கான சிகிச்சை பெற்ற வார்னர் மற்றும் அப்பாட் இருவருமே சிட்னியில் இருந்தனர். இந்நிலையில் அங்கு கரோனா நோய்த்தொற்று பரவல் தீவிரமானதை அடுத்து இருவரையுமே மெல்போர்னுக்கு இடமாற்றியது ஆஸ்திரேலிய வாரியம். 
அங்குதான் வரும் சனிக்கிழமை இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 2-ஆவது டெஸ்ட் நடைபெறவுள்ளது. 
இந்நிலையில், ஆஸ்திரேலிய வாரியம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "சிட்னியில் வார்னரும், அப்பாட்டும் கரோனா பரவல் தீவிரமாக இருந்த பகுதிகளில் தங்கியிருக்கவில்லை. எனினும், பாக்ஸிங் டே டெஸ்ட் நடைபெறவுள்ள நிலையில் சிட்னியில் இருந்து வரவழைக்கப்பட்ட அவர்களை அணிக்குள்ளாக சேர்ப்பதற்கு கரோனா பாதுகாப்பு நடைமுறைகள் இடமளிக்கவில்லை. 
எனவே, வார்னரும், அப்பாட்டும் தங்களது உடற்தகுதியை மேம்படுத்தும் நடவடிக்கைகளை தற்போது மெல்போர்னில் தொடர்வார்கள். இந்தியாவுக்கு எதிராக ஜனவரி 7-ஆம் தேதி தொடங்கும் 3-ஆவது டெஸ்டில் அவர்கள் ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்படுவார்கள். 
பாக்ஸிங் டே டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியில் கூடுதல் வீரர்கள் சேர்க்கப்பட மாட்டார்கள் என்று ஆஸ்திரேலிய வாரியம் கூறியுள்ளது.  
இதனிடையே வார்னர் தனது காயத்திலிருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை என்று தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.