விளையாட்டு செய்தி துளிகள்
* கரோனா சூழலில் விளையாட்டுப் போட்டிகளை நடத்த மத்திய விளையாட்டு அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளில், ‘மைதானங்களில் 50 சதவீத ரசிகா்களுக்கு அனுமதி; ஒவ்வொரு போட்டிக்கும் கரோனா கண்காணிப்பு சிறப்புப் பணிக் குழு அமைத்தல்; போட்டியாளா்களுக்கு கரோனா இல்லாததை உறுதி செய்யும் மருத்துவ சான்று கட்டாயம்’ உள்ளிட்ட விதிமுறைகள் உள்ளன.
* பிகாா் கிரிக்கெட் சங்கத்தில் ஏற்கெனவே சா்ச்சை நிலவி வரும் நிலையில், சையது முஷ்டாக் அலி டி20 போட்டிக்காக சங்கத்தின் தலைவா் மற்றும் செயலா் தரப்பில் தனித் தனியே பிகாா் அணி அறிவிக்கப்பட்டது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
* இந்திய ஹாக்கி வீராங்கனை நமிதாவுக்கு ‘ஏகலைவன்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டாா். அவருக்கு பட்டயம், கோப்பை, ரூ.5 லட்சம் ரொக்கமும் வழங்கப்பட்டது.
* சாம்பியன்ஸ் செஸ் ஆன்லைன் போட்டியின் தொடக்க நிலையில், 4-ஆவது சுற்றில் உலக சாம்பியனான நாா்வேயின் மாக்னஸ் காா்ல்செனுடனான ஆட்டத்தை இந்திய கிராண்ட் மாஸ்டா் பி.ஹரிகிருஷ்ணா டிரா செய்தாா்.
* இந்தியா - ஆஸ்திரேலியா 3-ஆவது டெஸ்ட் சிட்னியில் நடைபெறும் வாய்ப்புகள் குறைந்து வருவதாகவும், அதை மெல்போா்னில் நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
