பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்திரிணமூல் காங்கிரஸ் நிலைகுலைந்துவிட்டது: பிரதமா் மோடிடிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஆசிய கோப்பை: பாகிஸ்தானுக்கு இந்திய கிரிக்கெட் அணி செல்லாது என பிசிசிஐ தகவல்

பாகிஸ்தானில் டி20 ஆசிய கோப்பைப் போட்டி நடைபெற்றால், இந்திய அணி பாகிஸ்தானுக்குச் செல்லாது என்று பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது...

News image
Updated On :29 ஜனவரி 2020, 6:16 am

பாகிஸ்தானில் டி20 ஆசிய கோப்பைப் போட்டி நடைபெற்றால், இந்திய அணி பாகிஸ்தானுக்குச் செல்லாது என்று பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த வருட செப்டம்பரில் டி20 ஆசிய கோப்பைப் போட்டியை நடத்தும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனினும் இந்தியாவும் இப்போட்டியில் பங்கேற்பதால் பாகிஸ்தானுக்குப் பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பைப் போட்டி நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது. 

ஆசிய கோப்பைப் போட்டி எங்கு நடைபெறும் என்பதை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் விரைவில் முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா பங்கேற்கும் ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்திலும் இதர ஆட்டங்கள் பாகிஸ்தானில் நடைபெறவும் திட்டங்கள் ஆலோசிக்கப்பட்டு வருகின்றன. 

இந்த விவகாரம் குறித்து பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆசிய கோப்பைப் போட்டி பாகிஸ்தானில் நடைபெற்றால் இந்திய அணி அங்குச் செல்லாது. இந்தியாவின் பங்கேற்பு இல்லாமல் ஆசிய கோப்பை நடைபெறவேண்டும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் விரும்பினால் அது அவர்களுடைய விருப்பம். இந்தியா அப்போட்டியில் பங்கேற்கவேண்டும் என்றால் பாகிஸ்தானில் அப்போட்டி நடைபெறக்கூடாது என்று கூறியுள்ளார். 

2018-ல் ஆசிய கோப்பை இந்தியாவில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால், ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டி நடைபெற்றது. அதேபோல இந்த வருடம் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பைப் போட்டி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.