தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கரோனா அச்சுறுத்தலால் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு மாதம் விடுமுறை!

அடுத்த ஒரு மாதத்துக்கு உள்ளூர், சர்வதேச ஆட்டங்கள் எதுவும் நடைபெறாது. கிரிக்கெட் ஆட்டங்களையும் கிரிக்கெட் வீரர்களையும் கண்டுகளிக்க...

News image
Updated On :14 மார்ச் 2020, 9:00 am

கரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக ஐபிஎல் போட்டி ஏப்ரல் 15-ஆம் தேதி வரை ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ நேற்று அறிவித்தது. இதனால் இந்தியாவில் மட்டுமல்லாமல் இதர கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு மாதம் விடுமுறை கிடைத்துள்ளது.

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் ரத்து செய்யப்படுகின்றன. இதையடுத்து ஐபிஎல் போட்டியும் இந்தியா - தென் ஆப்பிரிக்கா ஒருநாள் தொடரும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. வீரா்கள், ரசிகா்கள் ஆகியோரின் நலன் கருதி முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டினருக்கு ஏப்ரல் 15-ஆம் தேதி வரை விசாக்கள் வழங்குவதும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதுபோன்ற கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கும் குறைந்தது ஒரு மாதம் விடுமுறை கிடைத்துள்ளது. ஐபிஎல் போட்டி ஏப்ரல் 15-க்குப் பிறகு தொடங்காமல் போனால் கிரிக்கெட் வீரர்களின் விடுமுறைக் காலம் மேலும் அதிகமாகும் எனத் தெரிகிறது. இதனால் சர்வதேச கிரிக்கெட் தொடர்கள், ஐபிஎல் போட்டி என அடுத்த ஒரு மாதத்துக்கு உள்ளூர், சர்வதேச ஆட்டங்கள் எதுவும் நடைபெறாது. கிரிக்கெட் ஆட்டங்களையும் கிரிக்கெட் வீரர்களையும் கண்டுகளிக்க கிரிக்கெட் ரசிகர்கள் குறைந்தது ஒரு மாதமாவது காத்திருக்கவேண்டிய நிலைமை தற்போது உள்ளது. 

கரோனா அச்சுறுத்தலால் பாதிப்பு ஆளாகியுள்ள கிரிக்கெட் தொடர்கள்:

1. ஐபிஎல் போட்டி ஏப்ரல் 15 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது
2. இந்தியா - தென் ஆப்பிரிக்கா ஒருநாள் தொடர் ஒத்திவைப்பு
3. இங்கிலாந்து - இலங்கை டெஸ்ட் தொடர் ஒத்திவைப்பு
4. ஆஸ்திரேலியா - நியூஸிலாந்து ஒருநாள், டி20 தொடர்கள் ஒத்திவைப்பு
5. உலக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு
6. ரசிகர்கள் இல்லாமல் பாகிஸ்தானில் பிஎஸ்எல் டி20 போட்டி நடத்தப்படும். மார்ச் 18-ல் முடிவடையும். போட்டியிலிருந்து விலகும் வெளிநாட்டு வீரர்களுக்கு அனுமதி.
7. ஆஸ்திரேலிய மகளிர் அணியின் தென் ஆப்பிரிக்கச் சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
8. வங்கதேசத்தில் நடைபெற இருந்த ஆசியா லெவன், உலக லெவன் அணிகள் மோதும் டி20 ஆட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.