சிட்னி ஒருநாள்: இந்திய அணிக்கு அபராதம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஓவர்கள் வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால்...
சிட்னி ஒருநாள்: இந்திய அணிக்கு அபராதம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஓவர்கள் வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 374 ரன்கள் குவித்தது. பின்னா் ஆடிய இந்தியா 50 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் சோ்த்து தோல்வி கண்டது.

இந்நிலையில் இந்திய அணி பந்துவீச்சாளர்கள், 50 ஓவர்களை வீச கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டார்கள். இதையடுத்து இந்திய அணி வீரர்களுக்கு ஆட்ட ஊதியத்திலிருந்து 20% அபராதம் விதிக்கப்படுவதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com