பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பாதுகாப்பு வளையத்தை அனைவரும் மதிக்க வேண்டும்: விராட் கோலி

துபையில் நன்கு ஊர் சுற்றவேண்டும் என்கிற மனநிலையில் யாரும் இருக்கக் கூடாது.

News image
Updated On :1 செப்டம்பர் 2020, 8:09 am

DIN

பாதுகாப்பு வளையத்தை அனைவரும் மதிக்க வேண்டும் என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

கரோனா பரவல் காரணமாக நிகழாண்டு இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டி தள்ளிவைக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பா் 19-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டி, நவம்பா் 10-ம் தேதி முடிவடைகிறது. துபை, அபுதாபி, ஷாா்ஜாவில் உள்ள மைதானங்களில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

இந்நிலையில் ஒரு பேட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி கூறியதாவது:

கடந்த 10 வருடங்களாக இரவு பகலாக கிரிக்கெட் ஆட்டங்களில் பங்கேற்றுள்ளேன். இப்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் பல மாதங்களுக்குப் பிறகு கிரிக்கெட் விளையாடவுள்ளோம். போட்டி தடையின்றி நடைபெற பாதுகாப்பு வளையத்தை அனைவரும் எப்போதும் மதிக்க வேண்டும். ஜாலிக்காகவோ ஊர் சுற்றவோ இங்கு வரவில்லை. துபையில் நன்கு ஊர் சுற்றவேண்டும் என்கிற மனநிலையில் யாரும் இருக்கக் கூடாது.

கடினமான சூழலை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும். நமக்கு வழங்கப்பட்டுள்ள சலுகையைப் புரிந்துகொண்டு ஐபிஎல்-லில் பங்கேற்க வேண்டும். தேவையில்லாத செயலில் யாரும் ஈடுபடக்கூடாது. சில மாதங்களுக்கு முன்பு ஐபிஎல் போட்டி நடக்கும் என்று கூட நினைக்கவில்லை. பயிற்சி செய்யும்போதுதான் எவ்வளவு நாள் கழித்து இதில் ஈடுபடுகிறோம் என உணர முடிந்தது. மிகவும் பதற்றத்துடன் தான் பயிற்சிக்குச் சென்றேன். நான் நினைத்தபோல கிரிக்கெட்டை அந்தளவுக்குத் தவறவிடவில்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.