ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

2016-க்குப் பிறகு மிகச்சிறந்த ஆர்சிபி அணி இதுதான்: விராட் கோலி நம்பிக்கை

மோசமான அனுபவங்களை எப்போதும் சுமந்திருக்கக் கூடாது என ஆர்சிபி அணி கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

News image
Updated On :9 செப்டம்பர் 2020, 11:52 am

DIN

மோசமான அனுபவங்களை எப்போதும் சுமந்திருக்கக் கூடாது என ஆர்சிபி அணி கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கடந்த சில வருடங்களாக மோசமாக விளையாடி வருகிறது. ஐந்து முறை பிளே ஆஃப்புக்குத் தகுதி பெற்றும் மூன்று முறை இறுதிச்சுற்றில் விளையாடியும் பிரபல வீரர்களைக் கொண்டிருந்தும் ஆர்சிபி அணியால் இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்லமுடியவில்லை. 

2018-ல் 6-ம் இடம், 2017, 2019 ஆண்டுகளில் கடைசி இடம் எனக் கடந்த மூன்று வருடங்களாக மிக மோசமாகவே விளையாடி வருகிறது. இதையடுத்து, அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன், பந்துவீச்சுப் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோர் நீக்கப்பட்டார்கள். அதற்குப் பதிலாக தலைமைப் பயிற்சியாளராக சைமன் கடிச்சும் அணி இயக்குநராக மைக் ஹெஸ்ஸனும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இந்த வருட ஐபிஎல் போட்டியையாவது வெல்வோமா என்கிற ஆர்சிபி ரசிகர்களின் ஏக்கத்தைப் போக்க ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது ஆர்சிபி அணி. அதன்படி, லோகோவின் வடிவத்தை மாற்றியுள்ளார்கள். இந்தப் புதிய லோகோ அணிக்கு ராசியாக அமையும் என நம்புகிறது ஆர்சிபி அணி.

2016-ல் இருந்தது போல இந்தமுறை மிகச்சிறப்பான அணி உள்ளதாக ஆர்சிபி கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது:

இந்த வருட ஆர்சிபி அணியில் டி20 ஆட்டத்துக்குத் தேவையான அனுபவம் உள்ளது. அணியில் உள்ள இளைஞர்கள் பொறுப்பை ஏற்றுக்கொண்டு நாங்கள் அளிக்கவுள்ள வாய்ப்புகளை எதிர்நோக்கியுள்ளார்கள். இது அருமையான காலக்கட்டம். 

2016-ம் ஆண்டு எங்களுக்கு மிகச்சிறப்பாக அமைந்தது. அதற்குப் பிறகு அனைத்து விதமாகவும் சிறப்பாக உள்ள அணி இதுதான். திறமையுள்ள இந்த அணி, களத்தில் தங்களுடைய பங்களிப்பை மிகச்சிறந்த முறையில் வெளிப்படுத்த வேண்டும்.

பழைய அனுபவங்களை மறந்துவிட்டோம். அதை எப்போதும் சுமந்து கொண்டிருக்கக் கூடாது. எங்களுடைய அணியைப் பார்த்து பலருக்கும் எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. கோப்பையை வெல்ல இந்தமுறை மிகவும் ஆர்வமாக உள்ளோம். டி வில்லியர்ஸும் புத்துணர்ச்சியுடன் நல்ல உடற்தகுதியுடன் உள்ளார் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.