தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஸ்டீவ் ஸ்மித் சதம்: இந்தியாவுக்கு 287 ரன்கள் இலக்கு

​இந்தியாவுடனான 3வது ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 286 ரன்கள் எடுத்துள்ளது.

News image
Updated On :19 ஜனவரி 2020, 11:52 am

DIN


இந்தியாவுடனான 3வது ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 286 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான தொடரைத் தீர்மானிக்கும் 3வது ஒருநாள் ஆட்டம் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் ஃபின்ச் ஆகியோர் களமிறங்கினார். இந்த ஆட்டத்திலும் வார்னரை தொடக்கத்திலேயே ஷமி ஆட்டமிழக்கச் செய்தார். இதன்பிறகு, கடந்த ஆட்டத்தைப்போல் இந்த ஆட்டத்திலும் ஃபின்ச் ரன் குவிக்கத் திணறினார். இதனால், ரன் வேகம் குறைவாகவே இருந்தது. 

இந்நிலையில், ஸ்டீவ் ஸ்மித்தின் சொதப்பல் காரணமாக ஆரோன் ஃபின்ச் 19 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார்.

இதைத் தொடர்ந்து, ஸ்டீவ் ஸ்மித்துடன் மார்னஸ் லபுஷான் இணைந்தார். இந்த இணை வழக்கம்போல் நல்ல பாட்னர்ஷிப்பை அமைத்து விளையாடியது. இருந்தபோதிலும் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் அவர்களைத் துரிதமாக ரன் குவிக்கவிடாமல் கட்டுப்படுத்தினர். எனவே, இருவரும் அரைசதம் அடித்தபோதிலும் துரிதமாக ரன் குவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

Story image

இந்த நெருக்கடியிலேயே லாபுஷேன் அரைசதம் அடித்த கையோடு 54 ரன்களுக்கு ஜடேஜா சுழலில் கோலியின் அற்புதமான கேட்ச்சால் ஆட்டமிழந்தார்.

Story image

இதையடுத்து, ரன் ரேட்டை உயர்த்தும் நோக்கத்தில் ஜடேஜா மற்றும் குல்தீப் சுழலை அதிரடியாக எதிர்கொள்ள ஆஸ்திரேலிய அணி மிட்செல் ஸ்டார்க்கை முன்கூட்டியே களமிறக்கியது. ஆனால், அவர் அதே ஓவரில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதனால், அந்த அணியின் வியூகம் தோல்வியில் முடிந்தது.

Story image

இதைத் தொடர்ந்து களமிறங்கிய அலெக்ஸ் கேரி, ஸ்டீவ் ஸ்மித்துடன் இணைந்து நல்ல பாட்னர்ஷிப்பை அமைத்தார். ஆனால், அதிரடியாக விளையாட வேண்டிய முக்கியமான கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி மீண்டும் விக்கெட்டை இழந்தது. குல்தீப் யாதவ் வீசிய 42வது ஓவரில் அலெக்ஸ் கேரி 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஆஷ்டன் டர்னரும் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தபோதிலும் ஸ்டீவ் ஸ்மித் பொறுப்புடன் விளையாடி சதம் அடித்தார். சதம் அடித்த பிறகும் அவர் ரன் ரேட்டை உயர்த்தும் நோக்கில் ரன் குவிப்பு வேகத்தை உயர்த்தினார். 

இந்நிலையில், 131 ரன்கள் எடுத்திருந்த அவர் ஷமி வேகத்தில் 48வது ஓவரில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் பாட் கம்மின்ஸ் மீண்டும் ஒருமுறை ஷமி வேகத்தில் யார்க்கர் பந்தில் முதல் பந்திலேயே போல்டாகி டக் அவுட் ஆனார்.

இதன்மூலம், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 286 ரன்கள் எடுத்தது.

இந்திய அணித் தரப்பில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் மற்றும் நவ்தீப் சைனி ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.