பாராலிம்பிக்: வட்டு எறிதலில் இந்தியாவின் யோகேஷ்க்கு வெள்ளி

டோக்யோ பாராலிம்பிக் போட்டியில் மேலும் ஒரு வெள்ளப்பதக்கத்தை இந்தியா கைப்பற்றியுள்ளது.  
கோப்புப் படம்.
கோப்புப் படம்.
Published on
Updated on
1 min read

டோக்யோ பாராலிம்பிக் போட்டியில் மேலும் ஒரு வெள்ளப்பதக்கத்தை இந்தியா கைப்பற்றியுள்ளது. 
வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் யோகேஷ் கத்தூனியா வெள்ளி வென்றார். இறுதிப்போட்டியில் 44.38மீ தூரம் வட்டு எறிந்து 2ஆவது இடம் பிடித்து யோகேஷ் வெள்ளி வென்றார். 

டெல்லியைச் சேர்ந்த 24 வயதான யோகேஷ் வட்டு எறிதலில் வெள்ளி வென்றதன் மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது.  பாராலிம்பிக்கில் இந்தியா இதுவரை ஒரு தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலம் என 5 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com