/

பாராலிம்பிக்: துப்பாக்கிச்சுடுதலில் இந்தியாவின் அவனிக்கு தங்கம்

டோக்யோ பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.

News image
Updated On :30 ஆகஸ்ட் 2021, 2:59 am

DIN

டோக்யோ பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.

மகளிர் 10மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அவனி தங்கப் பதக்கம் வென்றார். இறுதிப்போட்டியில் 249.6 புள்ளிகள் பெற்று உலக சாதனையை அவர் சமன் செய்தார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த 19 வயதான அவனி லெகாரா தங்கம்வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் இதுவரை இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கல என 4 பதக்கங்களை வென்றுள்ளன.

படம்: Paralympic Games twitter

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.