47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தோனியின் சிறப்பை ஐபிஎல் 2-ம் பாதியில் பார்க்கலாம்: தீபக் சஹார்

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பேட்டிங் சிறப்பை 14-வது ஐபிஎல் சீசனின் 2-ம் பாதியில் பார்க்கலாம் என வேகப்பந்துவீச்சாளர் தீபக் சஹார் தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :26 மே 2021, 2:10 pm

DIN


சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பேட்டிங் சிறப்பை 14-வது ஐபிஎல் சீசனின் 2-ம் பாதியில் பார்க்கலாம் என வேகப்பந்துவீச்சாளர் தீபக் சஹார் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி ஸ்போர்ட்ஸ்கீடாவுக்கு சஹார் அளித்த பேட்டியில் கூறியது:

"ஒரு பேட்ஸ்மேனால் 15-20 ஆண்டுகளுக்கு ஒரே மாதிரி பேட் செய்ய முடியாது. முறையாக கிரிக்கெட் விளையாடாத எந்தவொரு பேட்ஸ்மேனாலும் ஐபிஎல் போன்ற பெரிய தொடரில் தொடக்கத்திலிருந்தே சிறப்பாக செயல்பட முடியாது. அதற்கு சற்று நேரம் எடுக்கும். 

அவர் எப்போதும் இன்னிங்ஸை முடிக்கும் பொறுப்பையே ஏற்று விளையாடியுள்ளார். முறையாக கிரிக்கெட் விளையாடாத பட்சத்தில் அந்தப் பணி இன்னும் கடினமானதாக இருக்கும். 2018, 2019 ஐபிஎல் சீசன்களிலும் தோனி மெதுவாகவே அவரது தரத்துக்கு ஏற்ப விளையாடத் தொடங்கினார். எனவே, இந்த சீசனின் இரண்டாம் பாதியில் தோனியின் சிறப்பைப் பார்க்கலாம்" என்றார் அவர்.

14-வது ஐபிஎல் சீசன் கரோனா தொற்று காரணமாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 15 - அக்டோபர் 15 இடையே ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து ஐபிஎல் 2-ம் பாதியை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.