தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்: பிசிசிஐ அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :3 நவம்பர் 2021, 3:33 pm

DIN


இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதுபற்றி பிசிசிஐ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது:

"கிரிக்கெட் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் சுலக்ஷ்னா நாயக் மற்றும் ஆர்பி சிங் ஒருமனதாக ராகுல் டிராவிட்டை தலைமைப் பயிற்சியாளராக புதன்கிழமை நியமித்தனர். நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலிருந்து டிராவிட் பொறுப்பேற்பார்."

டிராவிட் தலைமை இந்திய கிரிக்கெட்டை புதிய உச்சத்துக்கு எடுத்துச் செல்லும் என பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிசிசிஐ தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு ராகுல் டிராவிட்டைவிட சிறந்த நபர் எவரும் இருக்க முடியாது என செயலர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.