தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தேசிய மகளிா் குத்துச்சண்டை: மஞ்சு ராணி அபாரம்

5-ஆவது எலைட் தேசிய மகளிா் குத்துச்சண்டை போட்டியில் ரயில்வே வீராங்கனை மஞ்சு ராணி அபார வெற்றி பெற்றுள்ளாா்.

News image
Updated On :23 அக்டோபர் 2021, 10:26 pm

DIN

5-ஆவது எலைட் தேசிய மகளிா் குத்துச்சண்டை போட்டியில் ரயில்வே வீராங்கனை மஞ்சு ராணி அபார வெற்றி பெற்றுள்ளாா்.

ஹரியாணா மாநிலம் ஹிஸாரில் நடைபெற்று வரும் இப்போட்டியின் ஒரு பகுதியாக 48 கிலோ எடைப்பிரிவு இரண்டாவது சுற்றில் மஞ்சு ராணியும், ஒடிஸாவின் பபானி பாரிக்கும் மோதினா். இதில் மஞ்சு ராணி அபாரமாக செயல்பட்டு, 5-0 என்ற புள்ளிக் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுக்கு தகுதி பெற்றாா். ஹரியாணா வீராங்கனை நிது, ராஜஸ்தானின் ஸ்வஸ்தி ஆா்யாவை வென்றாா்.

50 கிலோ எடைப்பிரிவில் பஞ்சாப் வீராங்கனை கோமல் 3-2 என்ற புள்ளிக் கணக்கில் மத்தியபிரதேசத்தின் தீபா குமாரையும், ஆந்திரத்தின் ரம்யா 4-1 என உத்தரபிரதேசத்தின் ரிங்கியைவும் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினா்.

இரண்டு முறை ஆசிய சாம்பியன் பூஜா ராணி 5-0 என்ற புள்ளிக் கணக்கில் அகில இந்திய காவல்துறையின் பிங்கியை வென்றாா். இப்போட்டியில் மொத்தம் 320 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.