தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

டேவிஸ் கோப்பை: இரு ஒற்றையர் ஆட்டங்களிலும் இந்தியா தோல்வி

பின்லாந்துக்கு எதிரான டேவிஸ் கோப்பை உலகப் பிரிவு-1 சுற்றில் முதல் இரு ஒற்றையர் ஆட்டங்களிலும் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது. 

News image

ராம்குமார் ராமநாதன்

Updated On :18 செப்டம்பர் 2021, 5:41 am


பின்லாந்துக்கு எதிரான டேவிஸ் கோப்பை உலகப் பிரிவு-1 சுற்றில் முதல் இரு ஒற்றையர் ஆட்டங்களிலும் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது. 

ஆசிய ஓசேனியா மண்டலம்-1 பிரிவுக்குட்பட்ட இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டேவிஸ் கோப்பை ஆட்டம் கஜகஸ்தான் தலைநகர் நூர் சுல்தான் நகரில் 2019 டிசம்பர் மாதம் நடைபெற்றது. பாகிஸ்தானை 4-0 என்ற செட் கணக்கில் அபாரமாக வீழ்த்தி 2020 உலக தகுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா. உலகின் 2-ஆம் நிலை அணியான குரோஷியாவுடன் மோதியது. 2018-ல் டேவிஸ் கோப்பைப் பட்டத்தை வென்ற குரோஷியா அணி 3-1 என்கிற கணக்கில் அபார வெற்றி பெற்றது.

இதில் தோல்வியுற்ற இந்தியா, செப்டம்பர் 2020-ல் உலகப் பிரிவு-1 சுற்றில் பின்லாந்துக்கு எதிரான போட்டியில் பங்குபெறுவதாக இருந்தது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் பின்லாந்தில் உள்ள எஸ்பூவில் இந்தியா - பின்லாந்து இடையிலான  உலகப் பிரிவு-1 சுற்று நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 3-6 6-7(1) என்ற நேர் செட்களில் ஒட்டோவிடம் தோல்வியடைந்தார். அடுத்த ஒற்றையர் ஆட்டத்தில் ராம்குமார் ராமநாதன், பின்லாந்தில் நெ. வீரரான எமிலிடம் 4-6 5-7 என்ற நெர் செட்களில் தோல்வியடைந்ததால் பின்லாந்து அணி 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இதையடுத்து இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் ரோஹன் போபண்ணாவும் திவிஜ் சரண் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.