காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அஸ்வின் சேர்க்கப்படவில்லையா..? ட்விட்டரில் குவியும் எதிர்ப்புகள்

​இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்படாததற்கு ட்விட்டரில் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன.

News image
கோப்புப்படம்
Updated On :4 ஆகஸ்ட் 2021, 11:19 am

DIN


இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்படாததற்கு ட்விட்டரில் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன.

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் டிரென்ட் பிரிட்ஜில் இன்று (புதன்கிழமை) தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

இந்திய அணியில் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் சேர்க்கப்படவில்லை. சுழற்பந்துவீச்சாளராக ரவீந்திர ஜடேஜா மட்டுமே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். வேகப்பந்துவீச்சாளர்கள் ஜாஸ்பிரீத் பூம்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்குர் என 4 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதில் அஸ்வின் சேர்க்கப்படாததற்கு ட்விட்டரில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்குப் பிறகு, டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியுடன் இணையும் முன் அஸ்வின் கவுன்டி கிரிக்கெட்டில் ஒரு ஆட்டம் விளையாடினார். இதில் இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாகப் பந்துவீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ரசிகர்கள் குறிப்பாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதைக் குறிப்பிட்டு விமரிசித்து வருகின்றனர்.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து நாடுகளில் விளையாடும்போது ஒரேயொரு சுழற்பந்துவீச்சாளரைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற சூழலில் பேட்டிங்கையும் கருத்தில்கொண்டு அஸ்வினுக்குப் பதில் ஜடேஜாவையே இந்திய அணி இதற்கு முன்பு தேர்வு செய்திருக்கிறது. இதனையும் குறிப்பிட்டு ஒவ்வொரு முறையும் அஸ்வினே பலிகடா ஆக வேண்டுமா என்ற விமரிசனத்தையும் ரசிகர்கள் முன்வைத்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.