பாராலிம்பிக்ஸ்: வெண்கலம் வென்ற இந்திய வீரர் சிங்ராஜ் அதானா

டோக்கியோ பாராலிம்பிக்ஸ் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் சிங்ராஜ் அதானா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். 
பாராலிம்பிக்ஸ்: வெண்கலம் வென்ற இந்திய வீரர் சிங்ராஜ் அதானா
Updated on
1 min read

டோக்கியோ பாராலிம்பிக்ஸ் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் சிங்ராஜ் அதானா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். 

ஆடவர் 10 மீ. ஏர் பிஸ்டல் பி1 பிரிவில் இன்று போட்டியிட்ட இந்தியாவின் சிங்ராஜ் அதானா, 216.8 புள்ளிகளுடன் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றார். இது, டோக்கியோ பாராலிம்பிக்ஸில் இந்திய அணி பெற்றுள்ள 8-வது பதக்கமாகும். இப்போட்டியின் தகுதிச்சுற்றில் இந்தியாவின் மனிஷ் நர்வால் முதலிடம் பிடித்தாலும் இறுதிச்சுற்றில் அவர் தோல்வியடைந்தார். 

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயது சிங்ராஜ், தான் பங்கேற்ற முதல் பாராலிம்பிக்ஸ் போட்டியிலேயே பதக்கம் வென்றுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com