இந்தியா ஏ - தெ.ஆ. ஏ அணிகள் பங்கேற்ற 2-வது டெஸ்ட்: முடிவு என்ன?

ஈஸ்வரன் 55 ரன்களும் விஹாரி 72 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.
விஹாரி (கோப்புப் படம்)
விஹாரி (கோப்புப் படம்)

இந்தியா ஏ - தெ.ஆ. ஏ அணிகள் பங்கேற்ற 2-வது அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் டிராவில் முடிவடைந்தது.

குஜராத்தைச் சேர்ந்த பிரியங் பஞ்சால் தலைமையிலான இந்திய ஏ அணி தென்னாப்பிரிக்காவின் ப்ளூம்ஃபோண்டைனில் நடைபெறும் தொடரில் கலந்துகொள்கிறது. மூன்று அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடர் டிசம்பர் 9-ல் நிறைவுபெறுகிறது. இந்த ஆட்டம் சூப்பர் ஸ்போர்ட் யூடியூப் தளத்தில் நேரலையாக ஒளிபரப்பாகி வருகிறது. 

2-வது அதிகாரபூர்வமற்ற டெஸ்டில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க ஏ அணி 297 ரன்கள் எடுத்தது. மார்கோ ஜான்சன் 70 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய ஏ அணியில் நவ்தீப் சைனி, இஷான் போரல் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். இந்த ஆட்டத்தில் இடம்பெற்ற தமிழக வீரர் பாபா அபரஜித், 1 விக்கெட் எடுத்தார்.

இந்திய ஏ அணி 74.5 ஓவர்களில் 276 ரன்கள் எடுத்தது. சர்ஃபராஸ் கான் 71 ரன்கள் எடுத்தார். கிளெண்டன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்பிறகு தெ.ஆ. ஏ அணி 58.5 ஓவர்களில் 212 ரன்கள் எடுத்தது. எந்த ஒரு பேட்டரும் அரை சதம் எடுக்கவில்லை. இஷான் போரல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய ஏ அணி வெற்றி பெற 234 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்திய ஏ அணி 41.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. அபிமன்யு ஈஸ்வரன் 55 ரன்களும் விஹாரி 72 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இதனால் 2-வது அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் டிராவில் முடிவடைந்தது. 

3-வது டெஸ்ட், டிசம்பர் 6 அன்று தொடங்குகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com