ருதுராஜ் கெயிக்வாட் இந்திய அணிக்கு உடனடியாகத் தேர்வு செய்யப்பட்டு அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என முன்னாள் வீரர் திலீப் வெங்சர்கார் கூறியுள்ளார்.
ஐபிஎல் 2021 போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் சிஎஸ்கே அணியைச் சேர்ந்த 24 வயது ருதுராஜ் முதலிடம் பிடித்தார். ஐபிஎல் வரலாற்றில் குறைந்த வயதில் (24) ஆரஞ்ச் தொப்பியைப் பெற்றவர் என்கிற பெருமையையும் அடைந்தார். இந்த வருடம் 16 ஆட்டங்களில் 635 ரன்கள் எடுத்துள்ளார் ருதுராஜ். 4 அரை சதங்கள், 1 சதம். ஸ்டிரைக் ரேட் - 136.26. 23 சிக்ஸர்கள். ஒரு பருவத்தில் 600 ரன்கள் எடுத்த 3-வது சிஎஸ்கே வீரர். இதற்கு முன்பு ஹஸ்ஸி, ராயுடு இந்த இலக்கை எட்டியுள்ளார்கள்.
இந்திய இளம் தொடக்க வீரர்களில் பிருத்வி ஷா, தேவ்தத் படிக்கல்லை விடவும் மிகத்திறமையானவர் என்கிற நம்பிக்கையை ஐபிஎல் 2021 போட்டியின் முடிவில் பெற்றார். அதனால் தான் அவ்விருவரும் இந்திய ஏ அணிக்குத் தேர்வாக, நேரடியாக (நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில்) இந்திய அணிக்குத் தேர்வானார் மஹாராஷ்டிரத்தைச் சேர்ந்த ருதுராஜ். இந்திய அணிக்காக இலங்கையில் இரு டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்
ஐபிஎல் போட்டியை முடித்துவிட்டு இந்தியா திரும்பிய ருதுராஜ், சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியிலும் நன்கு விளையாடினார். தற்போது, விஜய் ஹசாரே 50 ஓவர் போட்டியில் அதை விடவும் சிறப்பாக விளையாடி கவனத்தை ஈர்த்துள்ளார். தொடர்ச்சியாக 3 சதங்கள் அடித்து அசத்தியுள்ளார். இதுவரை 4 ஆட்டங்களில் 3 சதங்களுடன் 435 ரன்கள் எடுத்துள்ளார்.
இதையடுத்து, ருதுராஜ் கெயிக்வாட் இந்திய அணிக்கு உடனடியாகத் தேர்வு செய்யப்பட்டு அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என முன்னாள் வீரரும் முன்னாள் தேர்வுக்குழுத் தலைவருமான திலீப் வெங்சர்கார் கூறியுள்ளார். ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
இந்திய அணிக்கு ருதுராஜ் கெயிக்வாட் உடனடியாகத் தேர்வு செய்யப்பட வேண்டும். இந்திய அணியில் இடம்பெற அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். அவருக்கு 18, 19 வயது இல்லை. அவர் வயது 24. 28 வயதுக்குப் பிறகு அவருக்கு வாய்ப்புகள் வழங்குவதில் அர்த்தமில்லை. சமீபகாலமாக அற்புதமாக விளையாடி வருகிறார் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மலைவாழ் சங்கத்தினர்!

தமிழக ஆளுநர் பேச்சால் வைகை காப்பாற்றப்படுகிறதா..?, காயப்படுகிறதா..?

கரூர் பலி: 32 பேருக்கு அரசுப் பணி! இன்றைய செய்திகள் ஜூலை 9 - நேரலை

பள்ளிகளில் தவெக கொடியுடன் முதல்வர் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்! அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK



