ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

என்னுடைய கருத்துகள் அஸ்வினைக் காயப்படுத்தியிருந்தால் மகிழ்ச்சி: ரவி சாஸ்திரி

குல்தீப் யாதவ் பற்றிய என்னுடைய கருத்துகள் அஸ்வினைக் காயப்படுத்தி அவரை மேலும் ஊக்கப்படுத்தியிருந்தால்...

News image
Updated On :24 டிசம்பர் 2021, 6:18 am

DIN

குல்தீப் யாதவ் பற்றிய என்னுடைய கருத்துகள் அஸ்வினைக் காயப்படுத்தி அவரை மேலும் ஊக்கப்படுத்தியிருந்தால் மகிழ்ச்சியடைவேன் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

2018-ல் சிட்னியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்தியாவின் குல்தீப் யாதவ் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மழையால் பாதிக்கப்பட்ட அந்த டெஸ்டி டிரா ஆனது. இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-1 என வென்றது. இதையடுத்து பேட்டியளித்த அப்போதைய இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, வெளிநாடுகளில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களில் குல்தீப் யாதவ் முதல் தேர்வாக இருப்பார் என்றார். இதுபற்றி சமீபத்தில் கிரிக்இன்ஃபோ தளத்துக்குப் பேட்டியளித்த அஸ்வின், ரவி சாஸ்திரியின் கருத்துகளால் தான் நொறுங்கிப் போனதாகக் கூறினார். 

இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த ரவி சாஸ்திரி இதுபற்றி பதில் அளித்ததாவது:

Story image

ஒரு பயிற்சியாளராக என்னுடைய வேலை, அனைவருடைய உணவுக்கும் வெண்ணெய் தடவுவது அல்ல. எவ்வித உள்நோக்கமும் இன்றி உண்மையான புள்ளிவிவரங்களைச் சொல்ல வேண்டும். சிட்னி டெஸ்டில் அஸ்வின் விளையாடவில்லை. குல்தீப் விளையாடி 5 விக்கெட்டுகளை எடுத்தார். குல்தீப் பந்துவீசிய விதத்தைப் பார்க்கும்போது வெளிநாடுகளில் அவர் இந்திய அணியின் நெ.1 சுழற்பந்து வீச்சாளராக இருக்கக் கூடும் என்றேன். யாரையாவது அது காயப்படுத்தியிருந்தால் நல்லது. அஸ்வினை அது காயப்படுத்தியிருந்தால், வேதனை தந்திருந்தால் அதனால் அவர் தன் வேலையில் பொறுப்பாக இருந்ததால் நான் மகிழ்ச்சி அடைகிறேன். எந்தவொரு வீரரும் தன் மனத்தில், என்னுடைய பயிற்சியாளருக்குப் பாடம் கற்பிப்பேன், என் திறமையை நிரூபிப்பேன் என நினைப்பதையே விரும்புவேன். அது அவரை வேதனைப்படுத்தியிருந்தால் எனக்கு மகிழ்ச்சியே. அதனால் அவர் வேறு விதமாக திறமையை நிரூபித்திருந்தால், 2019-ல் அவர் பந்துவீசியதையும் 2021-ல் பந்துவீசியதையும் ஒப்பிடுங்கள், அதனால் எனக்கு மகிழ்ச்சியே. இப்போது உலகின் சிறந்த சுழற்பந்து வீச்சாளராக அஸ்வின் உள்ளார். தன்னுடைய உடற்தகுதியில் அவர் நன்கு முன்னேறியுள்ளார் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.