இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தை வென்று தொடரைக் கைப்பற்றியுள்ளது இங்கிலாந்து மகளிர் அணி.
டான்டனில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. மிகவும் தடுமாற்றத்துடன் விளையாடிய இந்திய மகளிர் அணி, 50 ஓவர்களில் 221 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கேப்டன் மிதாலி ராஜ் மீண்டும் சிறப்பாக விளையாடி 59 ரன்கள் எடுத்தார். ஷஃபாலி வர்மா 44 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்தின் கேட் கிராஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்பிறகு விளையாடிய இங்கிலாந்து மகளிர் அணி, 47.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சோபியா ஆட்டமிழக்காமல் 73 ரன்கள் எடுத்தார்.
இதனால் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என இங்கிலாந்து மகளிர் அணி முன்னிலை பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. 3-வது ஒருநாள் ஆட்டம் ஜூலை 3 அன்று நடைபெறுகிறது.