இந்திய ஏ அணி தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 நான்கு நாள் ஆட்டங்களில் பங்கேற்கிறது.
இந்நிலையில் இந்திய ஏ அணியில் தீபக் சஹார், இஷான் கிஷன் ஆகிய இருவரும் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
இருவரும் நியூசிலாந்துக்கு எதிரான 3-வது டி20 ஆட்டத்தில் விளையாடினார்கள். இதற்கு முன்பு அறிவிக்கப்பட்ட இந்திய ஏ அணியில் உபேந்திர யாதவ் மட்டும் விக்கெட் கீப்பராக இருந்தார். கூடுதலாக இன்னொரு விக்கெட் கீப்பர் தேவை என்பதால் இஷான் கிஷன் தேர்வாகியுள்ளார். முதல் தர கிரிக்கெட் ஆட்டங்களில் அதிகமாக விளையாடாமல் போனாலும் பந்தை நன்கு ஸ்விங் செய்யும் திறமை உள்ளதால் தீபக் சஹார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
குஜராத்தைச் சேர்ந்த பிரியங் பஞ்சால் தலைமையிலான இந்திய ஏ அணி தெ.ஆ.-வின் ப்ளூம்ஃபோண்டைனில் நடைபெறும் தொடரில் கலந்துகொள்கிறது. மூன்று அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் ஆட்டங்களும் நவம்பர் 23-ல் தொடங்கி டிசம்பர் 9-ல் நிறைவுபெறுகிறது.