ஐபிஎல் போட்டியிலிருந்து நான்கு இங்கிலாந்து வீரர்கள் விலகல்

ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் ஆகியோருக்கு அடுத்ததாக ஜானி பேர்ஸ்டோ, கிறிஸ் வோக்ஸ், டேவிட் மலான், பட்லர் ஆகிய இங்கிலாந்து வீரர்களும்...
பேர்ஸ்டோ
பேர்ஸ்டோ

ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் ஆகியோருக்கு அடுத்ததாக ஜானி பேர்ஸ்டோ, கிறிஸ் வோக்ஸ், டேவிட் மலான், பட்லர் ஆகிய இங்கிலாந்து வீரர்களும் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார்கள்.

கரோனா பாதிப்பால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2021 போட்டி, செப்டம்பா் 19-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் தொடங்குகிறது. துபையில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்-சென்னை சூப்பா் கிங்ஸ் அணிகள் விளையாடவுள்ளன. 

இங்கிலாந்து வீரர்களான பென் ஸ்டோக்ஸ்,  ஆர்ச்சர் ஆகியோர் ஐபிஎல் போட்டியிலிருந்து ஏற்கெனவே விலகிவிட்டார்கள். இந்நிலையில் ஜானி பேர்ஸ்டோ (சன்ரைசர்ஸ்), கிறிஸ் வோக்ஸ் (தில்லி கேபிடல்ஸ்), ஜாஸ் பட்லர், டேவிட் மலான் (ராஜஸ்தான் ராயல்ஸ்) ஆகிய இங்கிலாந்து வீரர்களும் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார்கள்.

ஐபிஎல் போட்டிக்குப் பிறகு டி20 உலகக் கோப்பை, ஆஷஸ் என நான்கு மாதங்களுக்குத் தொடர்ச்சியாக விளையாடி, கரோனா பாதுகாப்பு வளையத்தில் இருக்க வேண்டிய நிலைமை உள்ளதால் ஐபிஎல் போட்டியிலிருந்து இவர்கள் விலகியுள்ளதாக அறியப்படுகிறது. இதர இங்கிலாந்து வீரர்களான மொயீன் அலி, சாம் பில்லிங்ஸ், சாம் கரண், டாம் கரண், ஜார்ஜ் கார்டன், இயன் மார்கன், கிறிஸ் ஜார்டன், அடில் ரஷித், லியம் லிவிங்ஸ்டன், ஜேசன் ராய் ஆகிய இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் போட்டியில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com