ரத்தான டெஸ்டுக்குப் பதிலாக இரு டி20 ஆட்டங்கள்: பிசிசிஐயின் புதிய கோரிக்கை

மான்செஸ்டர் டெஸ்ட் ரத்தானதற்குப் பதிலாக அடுத்த வருடம் இரு டி20 ஆட்டங்கள்...
ரத்தான டெஸ்டுக்குப் பதிலாக இரு டி20 ஆட்டங்கள்: பிசிசிஐயின் புதிய கோரிக்கை

மான்செஸ்டர் டெஸ்ட் ரத்தானதற்குப் பதிலாக அடுத்த வருடம் இரு டி20 ஆட்டங்கள் அல்லது ஒரு டெஸ்டை விளையாட பிசிசிஐ சம்மதம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடியது. லண்டன் ஓவல் டெஸ்டை இந்திய அணி வென்று டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது. 5-வது டெஸ்ட், மான்செஸ்டரில் நடைபெறுவதாக இருந்தது. இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருண், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார்கள். அடுத்தக்கட்டமாக இந்திய அணியின் ஜூனியர் பிசியோதெரபிஸ்ட் யோகேஷ் பார்மருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால் மைதானத்தில் களமிறங்க இந்திய வீரர்கள் தயக்கம் காட்டினார்கள். இதையடுத்து மான்செஸ்டரில் நடைபெறுவதாக இருந்த 5-வது டெஸ்ட் ரத்தானது.

அடுத்த வருடம் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் இந்திய அணி விளையாடுகிறது. அப்போது ரத்தான 5-வது டெஸ்ட் விளையாடப்படும் என அறியப்பட்டது. இந்நிலையில் ரத்தான டெஸ்டுக்குப் பதிலாகக் கூடுதாக இரு டி20 ஆட்டங்களில் விளையாட பிசிசிஐ முன்வந்துள்ளது. இதுபற்றி பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியதாவது:

அடுத்த வருடம் ஜூலை மாதம் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்கிறபோது கூடுதலாக இரு டி20 ஆட்டங்களில் விளையாட சம்மதம் தெரிவித்துள்ளோம். மூன்று டி20 ஆட்டங்களுக்குப் பதிலாக 5 டி20 ஆட்டங்களில் விளையாடலாம். அல்லது ஒரு டெஸ்டில் விளையாடவும் எங்களுக்குச் சம்மதமே. இந்த இரண்டில் எதைத் தேர்வு செய்வது என்பது இங்கிலாந்தின் விருப்பம் என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com