விம்பிள்டன் டென்னிஸ் போட்டியிலிருந்து ரஷியா மற்றும் பெலாரஸ் நாட்டு வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டிற்கான விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் ஜூன் 27ஆம் தேதி தொடங்கி ஜூலை 10ஆம் தேதி நிறைவடைகிறது. இங்கிலாந்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் பல்வேறு நாடுகளின் முன்னணி வீரர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
இதையும் படிக்க | தில்லி அணியில் மற்றொரு வெளிநாட்டு வீரருக்கு கரோனா: பிடிஐ தகவல்
இந்நிலையில் உக்ரைன் மீதான ரஷியா போரின் காரணமாக ரஷிய மற்றும் பெலாரஸ் வீரர்களுக்கு விம்பிள்டன் போட்டியில் கலந்து கொள்ள தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே உலகக் கால்பந்து போட்டியில் ரஷியா பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.