பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

சாம்பியன்ஸ் லீக்கில் இடம்: மனீஷா கல்யான் சாதனை

ஐரோப்பிய கால்பந்தில் மகளிா் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் விளையாடும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை மனீஷா கல்யான் பெற்றிருக்கிறாா்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2022, 12:16 am

DIN

ஐரோப்பிய கால்பந்தில் மகளிா் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் விளையாடும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை மனீஷா கல்யான் பெற்றிருக்கிறாா்.

அந்தப் போட்டியில் அவா், சைப்ரஸ் கிளப்பான அப்போலோன் லேடிஸ் எஃப்சி அணியில் விளையாடுவதற்காகத் தோ்வு செய்யப்பட்டிருந்தாா். இந்நிலையில், சாம்பியன்ஸ் லீக் போட்டியில் அப்போலோன் அணியின் முதல் ஆட்டத்தில் ஆடும் வாய்ப்பு மனீஷாவுக்கும் கிடைத்தது.

லாத்விய கிளப்பான எஸ்எஃப்கே ரிகாவுக்கு எதிரான அந்த ஆட்டத்தில், 60-ஆவது நிமிஷத்தில் சைப்ரஸ் வீராங்கனை மரிலேனா ஜாா்ஜியுவுக்குப் மாற்றாக களமிறக்கப்பட்டாா் மனீஷா. அந்த ஆட்டத்தில் அப்போலோன் அணி 3-0 என்ற கோல் கணக்கில் ரிகா அணியை வீழ்த்தியது.

20 வயது இளம் வீராங்கனயைான மனீஷா, வெளிநாட்டு கிளப்புக்காக விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும் 4-ஆவது இந்திய வீராங்கனை ஆவாா். தேசிய அணிக்காகவும், இந்திய மகளிா் லீக் போட்டியில் கோகுலம் கேரளா அணிக்காகவும் மனீஷா சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறாா். சமீபத்தில், இந்திய கால்பந்து சம்மேளனம் வழங்கும் சிறந்த வீராங்கனை விருதை 2021-22 சீசனுக்காக அவா் வென்றிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.